உள்ளூர் செய்திகள்
காதல் திருமணம் செய்த மகள் கணவரை பிரிந்ததால் தொழிலாளி தற்கொலை
கோவை கருமத்தம்பட்டியில் காதல் திருமணம் செய்த மகள் கணவரை பிரிந்ததால் மனவேதனை அடைந்த தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
கோவை:
கோவை கருமத்தம்பட்டியை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 46). இவருடைய மூத்த மகள் கடந்த இரண்டரை வருடங்களுக்கு முன்பாக சேலம் பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் காதல் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் மகள் இருந்துள்ளது.
இந்த நிலையில் இவருடைய மகளுக்கும் கணவனுக்கும் ஏற்பட்ட தகராறில் கடந்த ஒரு வருடமாக தன்னுடைய தந்தை ஆனந்தராஜ் வீட்டில் இருந்துள்ளார். மகளின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என சமீப காலமாகவே ஆனந்தராஜ் மன விரக்தியில் இருந்தார். சம்பவத்தன்று ஆனந்தராஜ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண் எண்ணையை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் உடல் முழுவதும் தீக்காயங்களுடன் அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை கருமத்தம்பட்டியை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 46). இவருடைய மூத்த மகள் கடந்த இரண்டரை வருடங்களுக்கு முன்பாக சேலம் பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் காதல் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் மகள் இருந்துள்ளது.
இந்த நிலையில் இவருடைய மகளுக்கும் கணவனுக்கும் ஏற்பட்ட தகராறில் கடந்த ஒரு வருடமாக தன்னுடைய தந்தை ஆனந்தராஜ் வீட்டில் இருந்துள்ளார். மகளின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என சமீப காலமாகவே ஆனந்தராஜ் மன விரக்தியில் இருந்தார். சம்பவத்தன்று ஆனந்தராஜ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண் எண்ணையை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் உடல் முழுவதும் தீக்காயங்களுடன் அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.