செய்திகள்
முக ஸ்டாலின்

ரத்த பிரதேசமாக மாறிக் கொண்டிருக்கிறது: ஸ்டாலின்

Published On 2020-10-05 13:21 GMT   |   Update On 2020-10-05 13:21 GMT
உத்தர பிரதேசம் ரத்த பிரதேசமாக மாறிக் கொண்டிருக்கிறது என்று திமுக மகளிர் அணி மெழுகுவர்த்தி பேரணியில் மு.க. ஸ்டாலின் கடுமையாக பேசினார்.
உ.பி. பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு நீதி கேட்டு கனிமொழி தலைமையில், ஆளுநர் மாளிகை நோக்கி திமுக மகளிர் அணி பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியை தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசும்போது ‘‘ஹத்ராஸ் போன்ற பாலியல் கொடுமைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதே திமுகவின் கோரிக்கை. பெண்களுக்கு எதிரான குற்றத்தில் உத்தரபிரதேசம் முதலிடம், தமிழகம் இரண்டாமிடம். உ.பி. இன்று ரத்த பிரதேசமாக மாறிக் கொண்டிருக்கிறது.

தமிழகம் தேர்தலை எதிர்நோக்கி உள்ளது. தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறும். திமுக ஆட்சியை பிடித்த பிறகு, மாவட்டந்தோறும் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும்’’ என்றார்.

முன்னதாக திமுக எம்.பி. கனிமொழி கூறுகையில் ‘‘உ.பி.யில் பாலியல் வன்முறை அதிகரித்து வருகிறது. பசு மாடுகளை பாதுகாக்கும் ஆர்வத்தை பெண்கள் மீது காட்டுவதில்லை. பெண்களுக்கு இந்த நாட்டில் பாதுகாப்பின்மை அதிகரித்து வருகிறது’’ எனக் குற்றம்சாட்டினார்.
Tags:    

Similar News