செய்திகள்
ஸ்டீபன் பிளமிங்

4-ல் 3 வெற்றி என்பது நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகம்: ஸ்டீபன் பிளமிங்

Published On 2021-04-22 09:45 GMT   |   Update On 2021-04-22 09:45 GMT
ஐபிஎல் போட்டியில் முதல் நான்கு ஆட்டங்களில் 3-ல் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்த சீசனில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், முதல் அணியாக பிளே-ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்தது. இந்த முறை எப்பாடியாவது பிளே-ஆஃப் சுற்றை உறுதி செய்யும் நோக்கத்தில் விளையாட முடிவு  செய்தது.

ஆனால் முதல் போட்டியில் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தது. அதன்பின் பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளை தொடர்ச்சியாக வென்றது. நான்கு போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்றது ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளது.

நேற்றைய கொல்கத்தா அணிக்கெதிரான வெற்றிக்குப்பிறகு 4 போட்டியில் 3-ல் வெற்றி பெற்றது எதிர்பார்த்ததை விட அதிகம் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஸ்டீபன் பிளமிங் கூறுகையில் ‘‘கடந்த ஆண்டு அபுதாபி, துபாயில் விளையாடிய போட்டிகளில் இருந்து நாங்களாகவே ஏராளமான பாடங்களை கற்றுக்கொண்டோம். மும்பை வான்கடே மைதானம் குறித்து மதிப்பிடுவதில் அதிக கவனம் செலுத்தினோம். அதில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம்.

நான்கு போட்டிகளில் மூன்றில் வெற்றி என்பது எதிர்பார்த்ததை விட அதிகம். ஐந்தில் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றால் சிறப்பானதாக இருக்கும் என நினைத்தோம். ஆனால். இது உண்மையிலேயே பெருமை அளிக்கிறது. குறிப்பாக பேட்டிங்கை நினைக்கும்போது பெருமை’’ என்றார்.
Tags:    

Similar News