செய்திகள்
அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் 43 மருத்துவர்கள் உயிரிழப்பா?: மீண்டும் அமைச்சர் விஜய பாஸ்கர் மறுப்பு

Published On 2020-08-09 08:26 GMT   |   Update On 2020-08-09 08:26 GMT
தமிழகத்தில் 43 மருத்துவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், செயலாளர் ராதாகிருஷண்ன் ஆகியோர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினர்.

அதன்பின் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் கூறுகையில் ‘‘கொரோனா தடுப்பில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. தமிழகத்தில் அதிகமான கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுகிறது. இன்னும் அதிகரிக்கப்படும். தமிழக அரசு கொரோனா விசயத்தில் மிகவும் வெளிப்படத்தன்மையாக இருக்கிறது.

தமிழகத்தில் 43 மருத்துவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. ஐ.எம்.ஏ.-வின் மாநிலத் தலைவரே இதை மறுத்துள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆதாரம் இல்லாமல் எந்த செய்தியையும் பரப்ப வேண்டாம். இதுபோன்ற செய்திகள் மருத்துவர்களின் மன உறுதியை குறைக்கும். ஐ.எம்.ஏ. தெரிவிக்கும் தகவல்கள் பரிசீலிக்கப்பட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும்’’ என்றார்.
Tags:    

Similar News