செய்திகள்
மாங்காய் விளைச்சல்

விளைச்சல் அதிகம் இருந்தும் உரிய விலை கிடைக்காததால் மா விவசாயிகள் வேதனை

Published On 2021-04-29 06:58 GMT   |   Update On 2021-04-29 06:58 GMT
செம்மண் பூமியில் விளைந்த மாங்காய் ருசியாக இருக்கும் என்பதால் ராஜபாளையம் மாங்காய்க்கு நல்ல வரவேற்பு உள்ளது.
ராஜபாளையம்:

மங்குகிற காலத்திற்கு மாங்காயும், பொங்குகிற காலத்திற்கு புளியங்காயும் காய்த்து குலுங்கும் என்பது முதியோர் பழமொழியாகும். இந்த ஆண்டு சீசனில் மா மரங்களில் அதிகமாக பூக்கள் பூத்துக்குலுங்கியது. ஆனால் இடைப்பட்ட காலத்தில் மழை பெய்து பூக்கள் உதிரும் நிலை ஏற்பட்டது. ஆனாலும் அடுத்தடுத்து பெய்த மழை காரணமாக மீண்டும் மாமரங்கள் பூத்து கை கொடுத்தது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மா விளைச்சல் அதிகரித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மாங்காய்க்கு மிகவும் பிரசித்தி பெற்ற நகரமாகும். மேற்கு தொடர்ச்சிமலை அடிவார பகுதிகளில் மாமரங்கள் ஏராளமாக உள்ளன.

செம்மண் பூமியில் விளைந்த மாங்காய் ருசியாக இருக்கும் என்பதால் ராஜபாளையம் மாங்காய்க்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்த பகுதியில் விளையும் நெல்லூர் சப்பட்டை எனும் இமாம்சா ரகம் அதிக ருசி உள்ளது. இதன் விலை கிலோ ரூ.30 முதல் 35 வரை விற்பனையாகிறது.

2-ம் ரக மாங்காய்களான கிளிமூக்கு, ராஜபாளையத்தை பூர்வீகமாக கொண்ட பஞ்சவர்ணம், நீலம், காசாலட்டு போன்ற மா வகைகள் ரூ.30 முதல் 50 வரை விற்பனை ஆகிறது.

நெல்லூர் சப்பட்டை விலை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைந்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டைவிட தற்போது மாங்காய் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விலையும் சரிந்துள்ளது. இது பொதுமக்களுக்கு இனிப்பான செய்தியாக இருந்தாலும் விவசாயிகளுக்கு கசப்பானதாகும்.

மாமரங்களில் பூ பூப்பது முதல் பிஞ்சு விடுவது வரை தொடர்ச்சியாக மருந்து அடித்து நோயில் இருந்து காப்பது முதல், மாங்காய் இறக்குவதற்கு ஒரு நபருக்கு ஒருநாள் கூலி ரூ.8 வரை செலவாகிறது. இதனை அடிப்படையாக வைத்து பார்த்தால்கூட இந்த ஆண்டு லாபம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனல் மா விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News