செய்திகள்
தோல் தொழிற்சாலையின் மேற்கூரையில் இருந்து தவறி விழுந்த ஊழியர் உயிரிழப்பு
ராணிப்பேட்டையில் தோல் தொழிற்சாலையின் மேற்கூரையில் இருந்து தவறி விழுந்த ஊழியர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிப்காட்(ராணிப்பேட்டை):
பேரணாம்பட்டு அருகே உள்ள மேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன் (வயது 26). இவர், ராணிப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் தோல் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அவர், நேற்று தொழிற்சாலையின் மேற்கூரையில் ஏறி பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது அவர் திடீரெனத் தவறி கீழே விழுந்தார். பலத்த காயம் அடைந்த அவரை சக ஊழியர்கள் மீட்டு அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு, அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, பாண்டியன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேரணாம்பட்டு அருகே உள்ள மேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன் (வயது 26). இவர், ராணிப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் தோல் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அவர், நேற்று தொழிற்சாலையின் மேற்கூரையில் ஏறி பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது அவர் திடீரெனத் தவறி கீழே விழுந்தார். பலத்த காயம் அடைந்த அவரை சக ஊழியர்கள் மீட்டு அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு, அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, பாண்டியன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.