செய்திகள்
பிடி உஷா

விளையாட்டு வீரர்களுக்கு தடுப்பூசியில் முன்னுரிமை- பி.டி.உஷா வலியுறுத்தல்

Published On 2021-06-08 05:48 GMT   |   Update On 2021-06-08 06:43 GMT
வரவிருக்கும் தேசிய மற்றும் பிற விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க இருக்கும் வீரர்கள், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், உதவி நிர்வாகிகள் மற்றும் மருத்துவ குழுவுக்கு தடுப்பூசியில் முன்னுரிமை வழங்க வேண்டும்.
கொச்சி:

நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துப்பட்டு வருகிறது. தடுப்பூசி மூலமே கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும்.

இந்தநிலையில் தடுப்பூசியில் விளையாட்டு வீரர்-வீராங்கனைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று முன்னாள் பிரபல தடகள வீராங்கனை பி.டி.உஷா கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

வரவிருக்கும் தேசிய மற்றும் பிற விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க இருக்கும் வீரர்கள், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், உதவி நிர்வாகிகள் மற்றும் மருத்துவ குழுவுக்கு தடுப்பூசியில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று கேரள முதல்வருக்கு தாழ்மையான வேண்டுகோள் விடுக்கிறேன். விளையாட்டு துறையை நாம் புறக்கணித்து விட முடியாது.

இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.

கேரள முதல்-மந்திரி மட்டுமின்றி மத்திய சுகாதாரத்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்துக்கும் பி.டி. உஷா இந்த வேண்டுகோளை விடுத்து உள்ளார்.

Tags:    

Similar News