உள்ளூர் செய்திகள்
செல்போன் வாங்கி கொடுக்காததால் பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்ற சிறுவன்
செல்போன் வாங்கி கொடுக்காததால் பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்ற சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சேலம்:
சேலம் இரும்பாலை அருகே உள்ள தளவாய்பட்டி பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் தனது தந்தையிடம் பல மாதங்களாக செல்போன் வாங்கி தருமாறு கேட்டார்.
அதற்கு சங்கர் மறுப்பு தெரிவித்து வாங்கித் தராமல் இருந்துள்ளார். இதனால் மனமுடைந்த சிறுவன் நேற்று வீட்டில் இருந்த பினாயிலை எடுத்து குடித்து விட்டார்.
இதனை அறிந்த பெற்றோர் சிறுவனை சேலம் அரசு மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.