செய்திகள்
கைது

பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது

Published On 2021-04-20 13:38 GMT   |   Update On 2021-04-20 13:38 GMT
திருவெண்ணெய்நல்லூர் அருகே ஆற்றுக்கு சென்ற பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
அரசூர்:

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 30 வயது பெண், நேற்று காலை அங்குள்ள ஆற்றுக்கு சென்றார். அப்போது, அவரை கண்ணராம்பட்டு காலனியை சேர்ந்த அரசன் மகன் அமர்தராஜ் (26) என்பவர் சேலையால் அவரது கையை கட்டி, பலாத்காரம் செய்ய முயன்றார். அப்போது அந்த பெண் கூச்சலிட்டார். உடனே அமர்தராஜ் அங்கிருந்து தப்பி ஓடினார்.

இதையறிந்த கிராமத்து மக்கள், அவரை துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அமர்தராஜை கைது செய்தனர்.
Tags:    

Similar News