ஆன்மிகம்
மாரியம்மன்

நாஞ்சிக்கோட்டை மகாமாரியம்மன் கோவிலில் நவராத்திரி வழிபாடு

Published On 2020-10-22 04:17 GMT   |   Update On 2020-10-22 04:17 GMT
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை ஆரோக்கிய நகரில் மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நவராத்திரி கொலு வழிபாடு நடைபெற்றது.
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை ஆரோக்கிய நகரில் மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நவராத்திரி கொலு வழிபாடு நடைபெற்றது.

கொலு வழிபாட்டில் சிவன்- பார்வதி, முருகன், வள்ளி-தெய்வானை, கணபதி, கிருஷ்ணன், அரங்கநாதர், அனுமன், ராகவேந்திரர், சரஸ்வதி, லட்சுமி ஆகிய சாமிகளும் தேசத்துக்கு பாடுபட்ட மகாத்மா காந்தி, பாரதியார், விவேகானந்தர், திருவள்ளுவர் ஆகியோரின் உருவங்கள் பொம்மை வடிவில் இடம் பெற்று இருந்தது.

நவராத்திரி கொலு வழிபாட்டில் ஆரோக்கிய நகர், சுந்தரபுரம், ஆசிரியர் காலனி ஆகிய பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News