உள்ளூர் செய்திகள்
திருப்பூர் அருகே போலி மதுபாட்டில்கள் பறிமுதல்
போலீசார் காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் ஏராளமான மதுபாட்டில்கள் இருந்தன.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் ஏராளமான மதுபாட்டில்கள் இருந்தன. மேலும்அவை போலியாக தயாரிக்கப்பட்ட மதுபாட்டில்கள் என்பது தெரியவந்தது-.
இதையடுத்து 120 போலி மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் காரில் வந்த தஞ்சையை சேர்ந்த முனியராஜ்(வயது 30) என்பவரை கைது செய்தனர். அவர் பல்லடத்தில் தங்கியிருந்து போலி மது வகைகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அவரது கூட்டாளிகள் 2பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.