செய்திகள்
மின்சார நிறுத்தம்

இலக்கியம்பட்டி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

Published On 2021-10-20 19:30 GMT   |   Update On 2021-10-20 19:30 GMT
தர்மபுரி இலக்கியம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
தர்மபுரி:

தர்மபுரி மின்வாரிய செயற்பொறியாளர் இந்திரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தர்மபுரி இலக்கியம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக கலெக்டர் அலுவலகம், இலக்கியம்பட்டி, பாரதிபுரம், செந்தில் நகர், ஒட்டப்பட்டி, உங்கரானஅள்ளி, வெங்கட்டம்பட்டி, தேவரசம்பட்டி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News