ஆன்மிகம்
ஊத்துமலை ஆஞ்சநேயர் கோவிலில் 12-ந்தேதி அனுமன் ஜெயந்தி விழா
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் தாலுகா அனுமந்தபுரி ஊத்துமலை மலையடிவாரத்தில் அமைந்துள்ள ராமபக்த ஆஞ்சநேயர் கோவிலில் வருகிற 12-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அனுமன் ஜெயந்தி விழா நடக்கிறது.
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் தாலுகா அனுமந்தபுரி ஊத்துமலை மலையடிவாரத்தில் அமைந்துள்ள ராமபக்த ஆஞ்சநேயர் கோவிலில் வருகிற 12-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அனுமன் ஜெயந்தி விழா நடக்கிறது.
விழாவை முன்னிட்டு அன்று காலை 7.15 மணிக்கு மேல் நவக்கிரக சுதர்சன ஆஞ்சநேய மூலமந்திர ஜெப ஹோமம், ஆஞ்சநேய சகஸ்ரநாம அர்ச்சனை, சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை ராமபக்த ஆஞ்சநேயர் பக்த சபா மற்றும் ஊத்துமலை மலையடிவார கிராம மக்கள் செய்து வருகின்றனர்.