செய்திகள்
விபத்து

அம்பை அருகே விபத்தில் பூக்கடைக்காரர் பலி

Published On 2021-01-16 12:15 GMT   |   Update On 2021-01-16 12:15 GMT
அம்பை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பூக்கடைக்காரர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அம்பை:

அம்பை வேலாயுதநகரை சேர்ந்த செல்லப்பா மகன் சுப்பிரமணியன் (வயது 38). அம்பை பூக்கடை பஜாரில் பூக்கடை நடத்தி வந்தார். இவர் கடந்த 13-ந் தேதி இரவு தன் கடையில் பணியாற்றும் ஊழியர் ஒருவரை வீட்டில் விட்டுவிட்டு அம்பை மெயின் ரோடு வழியாக மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். அம்பை அகஸ்தீஸ்வரர் கோவில் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக இவர் மீது மோதியது. 

இதில் பலத்த காயமடைந்த சுப்பிரமணியனை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்சில் அம்பை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சுப்பிரமணியன் பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்த ஞானபிரகாசம் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News