ஆன்மிகம்
காமன் கோவிலில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா
காமன் கோவிலில் விஸ்வகர்மா ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஸ்ரீவிஸ்வகர்மா-காயத்ரி தேவிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது.
விஸ்வகர்ம ஜெயந்தி தினத்தை முன்னிட்டு காரைக்குடி மகர்நோன்பு திடலில் உள்ள காமன் கோவிலில் ஸ்ரீவிஸ்வகர்மா-காயத்ரி தேவிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது.
தொடர்ந்து விஸ்வகர்மா சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து விஸ்வகர்ம சமுதாய ஐவர்ண கொடி ஏற்றப்பட்டது.அம்மன் சன்னதியிலும், வெள்ளக்குண்டார் வீதியில் உள்ள நகைத்தொழிலாளர் சங்கத்திலும் விஸ்வகர்மா சமூக ஐவர்ண கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை காரைக்குடி விஸ்வகர்ம ஜெயந்தி விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.விழாவில் தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட ஐந்தொழில் விஸ்வகர்ம சமூகத்தினர் பங்கேற்றனர்.
தொடர்ந்து விஸ்வகர்மா சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து விஸ்வகர்ம சமுதாய ஐவர்ண கொடி ஏற்றப்பட்டது.அம்மன் சன்னதியிலும், வெள்ளக்குண்டார் வீதியில் உள்ள நகைத்தொழிலாளர் சங்கத்திலும் விஸ்வகர்மா சமூக ஐவர்ண கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை காரைக்குடி விஸ்வகர்ம ஜெயந்தி விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.விழாவில் தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட ஐந்தொழில் விஸ்வகர்ம சமூகத்தினர் பங்கேற்றனர்.