செய்திகள்
தீக்குளித்து தற்கொலை

மதுகுடிக்க மனைவி பணம் தராததால் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை

Published On 2020-09-21 10:26 GMT   |   Update On 2020-09-21 10:26 GMT
பெரணமல்லூர் அருகே மதுகுடிக்க மனைவி பணம் தராததால் மனமுடைந்த கூலித்தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
சேத்துப்பட்டு:

சென்னை பம்மலை சேர்ந்தவர் கோபி (வயது 35), கூலித்தொழிலாளி. இவரும், அவருடைய மனைவி காத்தாயும் பெரணமல்லூர் அருகே உள்ள ரகுநாதசமுத்திரம் கிராமத்தில் துக்க சம்பவம் விசாரிக்க வந்தனர். அப்போது காத்தாயிடம் மதுகுடிப்பதற்கு கோபி பணம் கேட்டுள்ளார். பணம் கொடுக்க மறுத்ததால் மனமுடைந்து கோபி தனது உடலில் டீசலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

இதில் தீக்காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கோபி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து பெரணல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கன்னியப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News