செய்திகள்
கைது

மின் கட்டணம் செலுத்த வரிசையில் நின்றவரிடம் பணம் அபேஸ்- வாலிபர் கைது

Published On 2020-09-25 12:05 GMT   |   Update On 2020-09-25 12:05 GMT
சேலம் கன்னங்குறிச்சியில் மின் கட்டணம் செலுத்த வரிசையில் நின்றவரிடம் பணம் அபேஸ் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கன்னங்குறிச்சி:

சேலம் கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 38). இவர் நேற்று முன்தினம் மின்கட்டணம் செலுத்துவதற்காக அதே பகுதியில் உள்ள மின்சார அலுவலகத்துக்கு சென்றார். பின்னர் அவர் அங்கு வரிசையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் அருகே நின்று கொண்டிருந்த 27 வயதுடைய வாலிபர் ஒருவர், கோவிந்தராஜ் சட்டைப்பையில் இருந்த ரூ.1,000-த்தை அபேஸ் செய்து விட்டு தப்பி சென்று விட்டார்.

இதுகுறித்து கன்னக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் கோவிந்தராஜிடம் பணம் அபேஸ் செய்தது தொடர்பாக கன்னங்குறிச்சியை சேர்ந்த விஜய் (27) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News