செய்திகள்
கைது

திருவாரூரில் சிறுமியை திருமணம் செய்த விவசாயி கைது

Published On 2021-09-23 10:30 GMT   |   Update On 2021-09-23 10:30 GMT
திருவாரூரில் 16 வயது சிறுமியை திருமணம் செய்த விவசாயியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
திருவாரூர்:

திருவாரூர் அடுத்த அலிவலம் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி பல வருடங்களுக்கு முன் சண்டை போட்டுக்கொண்டு பிரிந்து சென்றுவிட்டார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. இவர்கள் ராஜாவின் அம்மா (பாட்டி) ராணியிடம் (வயது 61) வளர்ந்து வருகின்றனர்.

ராஜா நாகப்பட்டினத்திலே உள்ளார். இதனிடையே திருவாரூர் மாவட்டம் பரவாக்கோட்டையை சேர்ந்த காமராஜ் (36). இவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் மனைவியை விவகாரத்து செய்து விட்டு தனியாக இருக்கிறார். இவர் இரண்டாவது திருமணம் செய்ய ராணியிடம் மூத்த பேத்தியை பெண் கேட்டுள்ளார்.

ஆனால் அந்த பெண் கல்லூரியில் படிப்பதாகவும், இளைய பேத்தியை திருமணம் செய்து வைப்பதாகவும் கூறி அதற்கு 1 லட்சம் பணம் பெற்றுக்கொண்டு காமராஜிக்கு 16 வயதே (சிறுமி) ஆன தனது 2வது பேத்தியை திருமணம் செய்து வைத்துள்ளார்.

திருமண செலவுகள் அனைத்தையும் காமராஜ் செய்துள்ளார். இந்நிலையில் ராணி மீண்டும் 50,000 பணம் வேண்டும் என காமராஜிடம் கேட்டபோது பணம் இல்லை என கூறவே போலீசில் புகார் செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த காமராஜ் ராணியை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராணி உறவினர்களிடம் கூற சிறுமி திருமணம் தெரியவர அவர்கள் மாவட்ட குழந்தைகள் நல அலகிற்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்ஸ்பெக்டர் கனிமொழி, சிறுமியை திருமணம்செய்த காமராஜ் மற்றும் பணம் வாங்கிக் கொண்டு சிறுமியை திருமணம் செய்து வைத்த சிறுமியின் பாட்டி ராணி ஆகியோரை போக்சோ சட்டம் மற்றும் குழந்தை திருமணம் போன்ற பிரிவில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News