செய்திகள்
கைது

வில்லியனூரில் 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்ற வாலிபர் கைது

Published On 2021-08-06 10:19 GMT   |   Update On 2021-08-06 10:19 GMT
வில்லியனூர் மார்க்கெட் வீதியில் 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
புதுச்சேரி:

புதுவையில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை செய்யப்பட்டு உள்ளது. ஆனால், இந்த தடையை மீறி கேரள லாட்டரி சீட்டு என்ற பெயரில் 3 நம்பர் லாட்டரி விற்பனை பல இடங்களில் ரகசியமாக நடந்து வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வில்லியனூரில் போலி லாட்டரி சீட்டு விற்ற ஒருவரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் வில்லியனூர் மார்க்கெட் வீதியில் 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக வில்லியனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் அப்பகுதியில் நின்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் பதில் கூறியதால் அவரது சட்டை பையில் சோதனையிட்டனர்.

அப்போது, அவரது சட்டை பையில் 3 நம்பர் லாட்டரி சீட்டுகள் மற்றும் லாட்டரி ரிசல்ட் பேப்பர், செல்போன், ரொக்க பணம் ரூ. 30 ஆயிரம் மற்றும் செல்போன் வைத்திருந்தார்.

இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் வில்லியனூர் கணுவாப்பேட்டை முதல் வன்னியர் வீதியை சேர்ந்த வேல்முருகன் (30) என்பதும், இவர் செல்போன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு லாட்டரி சீட்டு விற்று வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து வேல்முருகனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த லாட்டரி சீட்டு, விற்பனை பணம் ரூ.30 ஆயிரம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News