செய்திகள்
பெரியபாளையம் அருகே சைக்கிளில் சென்றபோது கார் மோதி காவலாளி பலி
பெரியபாளையம் அருகே சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் காவலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியபாளையம்:
பெரியபாளையம் அருகே உள்ள வடமதுரை எம்.டி.சி. நகரில் வசித்து வந்தவர் குப்புரங்கம் (63). மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
தற்போது அவர் வடமதுரையில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று மதியம் அவர் வேலைக்கு செல்ல சைக்கிளில் எம்.டி.சி. நகரில் இருந்து வெங்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார். வடமதுரை பஸ் நிறுத்தம் அருகே வளைவில் வந்த போது வெங்கலில் இருந்து பெரியபாளையம் நோக்கி சென்ற கார் திடீரென சைக்கிள் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த குப்புரங்கத்தை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர்.
இதுகுறித்து பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
பெரியபாளையம் அருகே உள்ள வடமதுரை எம்.டி.சி. நகரில் வசித்து வந்தவர் குப்புரங்கம் (63). மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
தற்போது அவர் வடமதுரையில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று மதியம் அவர் வேலைக்கு செல்ல சைக்கிளில் எம்.டி.சி. நகரில் இருந்து வெங்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார். வடமதுரை பஸ் நிறுத்தம் அருகே வளைவில் வந்த போது வெங்கலில் இருந்து பெரியபாளையம் நோக்கி சென்ற கார் திடீரென சைக்கிள் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த குப்புரங்கத்தை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர்.
இதுகுறித்து பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.