ஆன்மிகம்
உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா தொடங்கியது

உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா தொடங்கியது

Published On 2021-01-20 05:30 GMT   |   Update On 2021-01-20 05:30 GMT
திருச்சி உறையூரில் வானத்தையே கூரையாக கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் வெக்காளியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா தொடங்கியது.
திருச்சி உறையூரில் வானத்தையே கூரையாக கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் வெக்காளியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா நேற்று தொடங்கியது. இதனையொட்டி மதியம் 12 மணிக்கு வெக்காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது.

மாலை 6.30 மணிக்குமேல் அம்மன் கேடயத்தில் வீதி உலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு தேங்காய், பழம் சாற்றி வழிபாடு செய்தனர். தைப்பூச திருவிழா வருகிற 28-ந்தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது. தினமும் அம்மன் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். வருகிற 27-ந்தேதி அதிகாலை 5.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெறுகிறது.

அன்று காலை 10 மணிக்கு அம்மன் ரதத்தில் வீதி உலா வருகிறார். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி ஞானசேகரன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் செய்து உள்ளனர்.
Tags:    

Similar News