செய்திகள்
கொரோனா வைரஸ்

தஞ்சையில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலி

Published On 2021-07-20 14:25 GMT   |   Update On 2021-07-20 14:25 GMT
தஞ்சை மாவட்டத்தில் 108 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டத்தில் நேற்று 108 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 178 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 66 ஆயிரத்து 714 ஆக உயர்ந்தது. தற்போது 1,684 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 2 பெண்கள் உள்பட 4 பேர் பலியானார்கள். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 834 பேர் பலியாகி உள்ளனர்.
Tags:    

Similar News