செய்திகள்
கொரோனா வைரஸ்

பள்ளிக்கு சென்ற 12-ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா

Published On 2021-01-21 07:28 GMT   |   Update On 2021-01-21 08:30 GMT
சேலம் மாவட்டத்தில் பள்ளிக்குச் சென்ற 12-ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம்:

தமிழகம் முழுவதும் 10 மாதங்களுக்கு பிறகு கடந்த 19-ந்தேதி முதல் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் பள்ளிக்குச் சென்ற 12-ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் கருமந்துறை அருகே பெரிய கிருஷ்ணாபுரம் மாதிரி பள்ளிக்கு சென்ற தும்பல் பகுதியை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கொரோனா தொற்று உறுதியான 12-ம் வகுப்பு மாணவி விடுதியில் தங்கியிருந்ததால் அவருடன் தொடர்பில் இருந்த 36 மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

மேலும் பள்ளி மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
Tags:    

Similar News