ஆன்மிகம்
முதுகுளத்தூர் அய்யனார் கோவில் களரி விழா
முதுகுளத்தூர் அய்யனார் கோவிலில் இந்த ஆண்டு களரி விழாவில் முதுகுளத்தூர் சுற்றியுள்ள கிராம மக்கள் பாரம்பரிய வழக்கப்படி மாட்டுவண்டியில் வந்து கலந்து கொண்டனர்.
முதுகுளத்தூர் அருகே பூங்குளம் கிராமத்தில் அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் களரி விழா கொண்டாடப்படும்.
அதன்படி இந்த ஆண்டு களரி விழாவில் முதுகுளத்தூர் சுற்றியுள்ள கிராம மக்கள் பாரம்பரிய வழக்கப்படி மாட்டுவண்டியில் வந்து கலந்து கொண்டனர். சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜையை இரவு முழுவதும் நடத்தினர்.
இதை தொடர்ந்து நேற்று அய்யனார் கோவிலுக்கு பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல், பூக்குழி இறங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அதன்படி இந்த ஆண்டு களரி விழாவில் முதுகுளத்தூர் சுற்றியுள்ள கிராம மக்கள் பாரம்பரிய வழக்கப்படி மாட்டுவண்டியில் வந்து கலந்து கொண்டனர். சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜையை இரவு முழுவதும் நடத்தினர்.
இதை தொடர்ந்து நேற்று அய்யனார் கோவிலுக்கு பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல், பூக்குழி இறங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.