செய்திகள்
கொள்ளை

கும்பகோணம் அருகே ரெயில்வே ஊழியர் வீட்டில் 50 பவுன் நகைகள்-பணம் கொள்ளை

Published On 2019-08-31 05:29 GMT   |   Update On 2019-08-31 05:29 GMT
கும்பகோணம் அருகே ரெயில்வே ஊழியர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 50 பவுன் நகைகள் மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
கும்பகோணம்:

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பந்தநல்லூர் சிவன் கோவில் மேலவீதியை சேர்ந்தவர் மனோகரன். கும்பகோணத்தில் ரெயில்வே நிலைய டெக்னீசியனாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தனம். பந்தநல்லூர் அருகே உள்ள ரங்கராஜபுரம் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார்.

நேற்று இருவரும் வீட்டை பூட்டிவிட்டு பணிக்கு சென்று விட்டனர். நேற்று மாலை வீடு திரும்பிய போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு மர்மநபர்கள் உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 50 பவுன் நகைகள், ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து பந்தநல்லூர் போலீசில் தனம் புகார் செய்தார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

தஞ்சாவூரிலிருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.
Tags:    

Similar News