செய்திகள்
துருக்கி ஏகன் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- கிரீஸ் நாட்டில் சுனாமி பேரலை
துருக்கி நாட்டின் ஏகன் தீவுகளில் 7.0 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அதன் அதிர்வால் கிரீஸ் நாட்டில் சுனாமி பேரலை ஏற்பட்டது.
துருக்கி நாட்டின் ஏகன் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவானது. இஸ்மிர் பகுதியில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளதால் பலர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
துருக்கியில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கும் அருகில் உள்ள கிரீஸ் நாட்டிலும் உணரப்பட்டது. இதனால் அங்கு சுனாமி பேரலை ஏற்பட்டது.