செய்திகள்
நிலநடுக்கம்

ம.பி.யை அடுத்து லடாக்கிலும் தொடர் நிலநடுக்கங்கள்

Published On 2020-10-31 21:59 GMT   |   Update On 2020-10-31 21:59 GMT
ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதியில் நேற்று இரவு 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.
லடாக்:

ஜம்மு காஷ்மீரில் உள்ள லடாக் பகுதியில் நேற்று இரவு 10.29 மணிக்கு ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் இரவு 11.36 மணிக்கு மீண்டும் லேசான நில அதிர்வு ஏற்பட்டது.

இரண்டாவதாக ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவாகியது என இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, மத்திய பிரதேசத்தின் சியோனி மாவட்டத்திலும் நேற்று இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News