செய்திகள்
மதுரை அருகே தண்ணீர் லாரி மோதி ஒருவர் பலி
மதுரை அருகே தண்ணீர் லாரி மோதி ஒருவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை மேலபொன்னகரம் பகுதியை சேர்ந்தவர் தயாளன் (வயது 46). சம்பவத்தன்று இவர் காளவாசல் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தண்ணீர் லாரி மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துபோனார். இந்த விபத்து தொடர்பாக தயாளனின் மனைவி அளித்த புகாரின் பேரில் கரிமேடு போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் கார்த்திக்ராஜாவை கைதுசெய்தனர்.