செய்திகள்
கொரோனா தடுப்பூசி

ரஷியாவின் ஸ்புட்னிக் 5 தடுப்பூசி - இந்தியாவின் டாக்டர் ரெட்டி ஆய்வகங்களுக்கு விற்பனை

Published On 2020-09-16 10:46 GMT   |   Update On 2020-09-16 13:27 GMT
கொரோனாவுக்கு எதிரான ரஷியாவின் ‘ஸ்புட்னிக் 5’ தடுப்பூசியை இந்தியாவின் டாக்டர் ரெட்டி ஆய்வகங்களுக்கு விற்பனை செய்யபடுகிறது.
மாஸ்கோ:
 
உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு எதிராக பல்வேறு உலக நாடுகள் தடுப்பூசிகளை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதில் பல நாடுகள் கணிசமான வெற்றியையும் பெற்று தடுப்பூசி தயாரிப்பின் இறுதிக்கட்டத்தில் உள்ளன.

அந்த வகையில் ரஷியாவின் கமாலயா நிறுவனம் ‘ஸ்புட்னிக் 5’ என்ற தடுப்பூசியை தயாரித்து உள்ளது. 3-வது கட்ட மனித பரிசோதனைக்கு தயாராகி வரும் இந்த தடுப்பூசியை இந்தியாவில் தயாரிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக மத்திய அரசின் தேசிய கொரோனா தடுப்பூசி நிபுணர் குழு தலைவரும், நிதி ஆயோக் உறுப்பினருமான டாக்டர் வி.கே.பால் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, இந்த தடுப்பூசி தற்போது ரஷியாவில் மக்கள் பயன்பாட்டிற்கு வந்து உள்ளது.

இந்நிலையில், ரஷியாவின் ஸ்புட்னிக் 5 தடுப்பூசி இந்தியாவுக்கு விற்பனைக்கு வருகிறது.

இந்தியாவில் ஒழுங்குமுறை ஒப்புதல் கிடைத்தவுடன் கொரோனாவுக்கு எதிராக இந்தியாவின் டாக்டர் ரெட்டியின் ஆய்வகங்களுக்கு 100 மில்லியன் டோஸ் ஸ்பூட்னிக்-வி தடுப்பூசி வழங்கப்படும் என்று ரஷியாவின் நேரடி முதலீட்டு நிதியம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

ரஷிய நேரடி முதலீட்டு நிதியம் (ஆர்.டி.ஐ.எஃப்) மருத்துவ பரிசோதனைகள் மற்றும் தடுப்பூசி விநியோகத்திற்கு இந்திய நிறுவனத்துடன் ஒத்துழைக்க ஒப்புக் கொண்டதாக கூறி உள்ளது.
Tags:    

Similar News