வழிபாடு
பவானி கூடுதுறை

நாளை முழு ஊரடங்கு: பவானி கூடுதுறையில் பரிகாரம், புனித நீராட தடை

Published On 2022-01-08 04:09 GMT   |   Update On 2022-01-08 07:59 GMT
இன்று (சனிக்கிழமை) மற்றும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 2 நாட்களுக்கு பவானி கூடுதுறையில் பக்தர்கள் புனித நீராடவும், பரிகாரம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு :

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. மேலும் உருமாறிய ஒமைக்காரன் தொற்றும் சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் பரவி உள்ளது. இதனால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து வருகிறது.

மேலும் இரவு நேர ஊரங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரங்கு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் சுற்றுலா தலங்களில் ஞாயிற்றுக் கிழமைகளில் அதிகளவு மக்கள் கூடுவார்கள்.

இதை தவிர்க்கும் வகையில் நாளை சுற்றுலா தலங்களுக்கும் பொது மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறைக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து புனித நீராடுவார்கள். மேலும் தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் பரிகாரங்கள் செய்ய தமிழகம் ழுமுவதும் இருந்து மக்கள் அதிகளவு வருவார்கள்.

இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக நாளை முழு ஊரங்கு அமல்படுத்தப்படுகிறது. இதையொட்டி இன்று (சனிக்கிழமை) மற்றும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 2 நாட்களுக்கு பவானி கூடுதுறையில் பக்தர்கள் புனித நீராடவும், பரிகாரம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் சங்கமேஸ்வரர் கோவிலுக்கு செல்லவும் அனுமதி இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையொட்டி கூடுதுறை ஆற்றுக்கு செல்லும் வழி அடைக்கப்பட்டு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் செல்லாத வகையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் அணை பகுதியில் பொழுது போக்கு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவுகாவுக்கு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருவார்கள்.

நாளை முழு ஊரடங்கையொட்டி இன்று (சனிக்கிழமை) முதல் மறு உத்தரவு வரும் வரை பவானிசாகர் பூங்காவுக்கு மக்கள் செல்ல அனுமதி இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையொட்டி அணை பூங்கா நுழைவு வாயில் அடைக்கப்பட்டு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

இதேபோல் கோபி அடுத்த கொடிவேரி தடுப்பணையில் குளிப்பதற்கும், கண்டு ரசிப்பதற்கும் ஏராளமான பொதுமக்கள் வருவார்கள். மேலும் சனி, ஞாயிறு மற்றும் முக்கிய நாட்களில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள். தடுப்பணையில் தண்ணீர் அதிகளவு கொட்டி வந்ததால் தடை விதிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடிவேரி தடுப்பணையில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதையொட்டி பொதுமக்கள் அதிளவில் வந்து குளித்து மகிழ்ந்து சென்றனர்.

இந்த நிலையில் முழு ஊரடங்கையொட்டி கொடிவேரி தடுப்பணையில் மக்கள் குளிக்கவும், கண்டு கழிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதே போல் கொடுமுடி காவிரி ஆற்றில் குளிக்கவும், சாமி தரிசனம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News