செய்திகள்
பொள்ளாச்சி அருகே ஓய்வு பெற்ற வன ஊழியர் வீட்டில் 11 பவுன் நகை திருட்டு
பொள்ளாச்சி அருகே ஓய்வு பெற்ற வன ஊழியர் வீட்டில் 11 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
பொள்ளாச்சி அருகே உள்ள டி. கொட்டாம்பட்டி பாலாஜி நகரை சேர்ந்தவர் ரங்கராஜன் (வயது 68). ஓய்வு பெற்ற வன ஊழியர்.
சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு அந்த பகுதியில் உள்ள மகன் வீட்டுக்கு சென்றார். நேற்று வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. அதிர்ச்சியடைந்த ரங்கராஜன் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், மோதிரம் உள்பட 11 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றது தெரிய வந்தது.
இது குறித்து ரங்கராஜன் மகாலிங்கபுரம் போலீசில் புகார் செய்தார். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.
இதனை வைத்து ஓய்வு பெற்ற வன ஊழியர் வீட்டில் 11 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
பொள்ளாச்சி அருகே உள்ள டி. கொட்டாம்பட்டி பாலாஜி நகரை சேர்ந்தவர் ரங்கராஜன் (வயது 68). ஓய்வு பெற்ற வன ஊழியர்.
சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு அந்த பகுதியில் உள்ள மகன் வீட்டுக்கு சென்றார். நேற்று வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. அதிர்ச்சியடைந்த ரங்கராஜன் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், மோதிரம் உள்பட 11 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றது தெரிய வந்தது.
இது குறித்து ரங்கராஜன் மகாலிங்கபுரம் போலீசில் புகார் செய்தார். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.
இதனை வைத்து ஓய்வு பெற்ற வன ஊழியர் வீட்டில் 11 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.