செய்திகள்
நிதிஷ் குமார்

குற்றம், ஊழல் மற்றும் வகுப்புவாதத்திற்கு எதிராக போராடி வருகிறோம்: நிதிஷ் குமார்

Published On 2020-10-25 10:38 GMT   |   Update On 2020-10-25 10:38 GMT
பீகார் தேர்தல் பிரசாரத்தின்போது குற்றம், ஊழல் மற்றும் வகுப்புவாதத்திற்கு எதராக பணியாற்றி வருகிறோம் என நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பீகாரில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. 243 சட்டசபை தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக நடக்கிறது. முதல் கட்ட தேர்தல் வருகிற 28-ந்தேதி நடக்கிறது. இதனால் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதல்வர் நிதிஷ் குமார் இன்று மதுபானி புல்பராஸ் என்ற இடத்தில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது ‘‘நாங்கள் குற்றம், ஊழல் மற்றும் வகுப்பு வாதத்திற்கு எதிராக பணியாற்றி வருகிறோம். சகோரதத்துவம் மற்றும் நல்லிணக்கம் சூழ்நிலையை உருவாக்க முயற்சி செய்து வருகிறோம். ஒவ்வொரு துறையும் முன்னேற்றம் அடையும் என நம்புகிறோம்’’ என்றார்.
Tags:    

Similar News