செய்திகள்
அரியலூர் அருகே விபத்தில் முதியவர் பலி
அரியலூர் அருகே விபத்தில் முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர்:
அரியலூர் அருகே உள்ள கொல்லாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துகுமார் (வயது 70). இவர் சம்பவத்தன்று சாலையில் நடந்து சென்றபோது எதிரே வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதியதில் பலத்த காயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.