செய்திகள்

என் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ உந்தப்பட்டுள்ளது - ப.சிதம்பரம்

Published On 2018-07-19 13:39 GMT   |   Update On 2018-07-19 13:57 GMT
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்தின் மீது சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், அதிகப்படியான அழுத்தம் காரணமாகவே சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததாக சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். #AircelMaxisCase #Chidambaram #CBI
புதுடெல்லி:

கடந்த 2006-ம் ஆண்டு மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ. 3,500 கோடி முதலீடு செய்தது. இந்த முதலீட்டுக்கு முறையான அனுமதி பெறவில்லை எனவும், இதற்கு ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமான நிறுவனம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரத்தை அமலாக்கத் துறையும், சிபிஐயும் தீவிரமாக விசாரித்து வருகின்றன. டெல்லியில் உள்ள பாட்டியாலா சிபிஐ நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வருகிறது.



இந்நிலையில், ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் நிதி மந்திரி சிதம்பரம் பெயரை குறிப்பிட்டு சி.பி.ஐ புதிய குற்றப்பத்திரிகையை இன்று தாக்கல் செய்துள்ளது.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ப,சிதம்பரம், சிபிஐ-க்கு அளிக்கப்படும் அதிகப்படியான அழுத்தம் காரணமாகவே என் மீதும், மதிப்புமிக்க அரசு அதிகாரிகள் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். #AircelMaxisCase #Chidambaram #CBI
Tags:    

Similar News