ஆன்மிகம்
அய்யா வைகுண்டர்

அய்யா வைகுண்டபதியில் திருக்கல்யாண ஏடு வாசிப்பு நிகழ்ச்சி

Published On 2021-01-06 04:07 GMT   |   Update On 2021-01-06 04:07 GMT
புத்தளம் பொருத்தட்டுவிளையில் உள்ள அய்யா வைகுண்டபதியில் மார்கழி மாத ஏடு வாசிப்பு விழா கடந்த 25-ந் தேதி தொடங்கி 10-ந் தேதி வரை நடக்கிறது.
புத்தளம் பொருத்தட்டுவிளையில் உள்ள அய்யா வைகுண்டபதியில் மார்கழி மாத ஏடு வாசிப்பு விழா கடந்த 25-ந் தேதி தொடங்கி 10-ந் தேதி வரை நடக்கிறது. இந்த நிலையில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) திருக்கல்யாண ஏடு வாசிப்பு நிகழ்ச்சி நடக்கிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு பக்தர்கள் கடலில் பதம்விட்டு பதிவலம் வந்து அய்யாவை வழிபடுதல், பணிவிடை நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு சரவிளக்கு, திருக்கல்யாண திருஏடு வாசிப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. 8 மணிக்கு அய்யா வைகுண்டர் கருட வாகனத்தில் வலம் வருதல், 10 மணிக்கு அன்னதர்மம், இனிமம் வழங்கப்படுகிறது.

10-ந் தேதி மாலை 5 மணிக்கு பட்டாபிஷேக ஏடு வாசிப்பு, இரவு 9 மணிக்கு அனுமான் வாகனத்தில் வைகுண்டர் வலம் வருதல் நடக்கிறது.
Tags:    

Similar News