ஆன்மிகம்
அய்யா வைகுண்டசாமி

தூக்கணாம்பாக்கம் பள்ளிப்பட்டு அய்யா வைகுண்ட சாமி கோவிலில் சிறப்பு வழிபாடு

Published On 2021-10-25 08:57 GMT   |   Update On 2021-10-25 08:57 GMT
ஸ்ரீமன் நாராயணசாமி நிழல் தாங்கல் என்ற பெயரில் உள்ள அய்யா வைகுண்ட சாமி கோவிலில் ஐப்பசிமாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கடலூர் அருகே உள்ள தூக்கணாம்பாக்கம் பள்ளிப்பட்டில் ஸ்ரீமன் நாராயணசாமி நிழல் தாங்கல் என்ற பெயரில் உள்ள அய்யா வைகுண்ட சாமி கோவிலில் ஐப்பசிமாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

முன்னதாக காலை 6 மணியளவில் தீபம் ஏற்றி உகப்படிப்பும், பகல் 12 மணியளவில் அய்யா வைகுண்டசாமிக்கு சிறப்பு அலங்காரத்துடன் உச்சிப்படிப்பும் அதைத்தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது.

இதில் கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றி உகப்படிப்பு நடைபெற்றது.
Tags:    

Similar News