செய்திகள்
சாத்தூர் அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூர்:
சாத்தூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாத்தூர் தபால் நிலைய சந்து அருகில் வைத்து மதுபாட்டில் விற்ற சாத்தூரை சேர்ந்த மாரிக்கனி (வயது 42) என்பவரிடம் இருந்து 19 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.