செய்திகள்
தற்கொலை

ஆண்டிப்பட்டி அருகே கிளி ஜோசியர் தற்கொலை

Published On 2019-11-14 10:17 GMT   |   Update On 2019-11-14 10:17 GMT
ஆண்டிப்பட்டி அருகே கிளி ஜோசியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.ராஜகோபாலன் பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன்(38). கிளி ஜோசியர். இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. தினமும் மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வருவாராம். வழக்கம்போல் இவர் மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது சமையல் செய்யவில்லை எனக்கூறி மனைவியிடம் தகராறு செய்தார்.

இதனால் அவரது மனைவி கோபித்துக்கொண்டு தாய்வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது ராஜேந்திரன் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார்.

உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News