ஆன்மிகம்
தீபம் ஏற்றி வழிபாடு

தீப முகங்களும்.. பலன்களும்..

Published On 2021-01-01 09:03 GMT   |   Update On 2021-01-01 09:03 GMT
எத்தனை முக தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும் என்றும் அதனால் கிடைக்கும் பலன்கள் என்னவென்றும் அறிந்து கொள்ளலாம்.
* இரண்டு முகம் - குடும்ப ஒற்றுமை, தன சேர்க்கை, செல்வாக்கு உண்டாகும்.

* மூன்று முகம் - காரிய வெற்றி, பராக்கிரமம், தைரியம் கிட்டும்.

* நான்கு முகம் - நிலம், வீடுகள், வாகனங்கள், கால் நடை விருத்தி, வியாபார அபிவிருத்தி, சவுபாக்கியம் உண்டாகும்.

* ஐந்து முகம் - அஷ்ட ஐஸ்வர்யம் உண்டாகும். சர்வ சித்தி, குறைவில்லா பெருவாழ்வு உண்டாகும்.

* வாரம் ஒரு நாள் வெள்ளி அன்றாவது பசு நெய்யில் பஞ்சமுக தீபம் ஏற்றுவது நல்லது.

* தீபம் ஏற்றும் பெண்மணி திருமணம் ஆன பெண்ணாக இருந்தால், வளையல், மெட்டி, புருவ மத்தியில் குங்குமம், நெற்றி வகட்டில் குங்குமம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும்

* தீபம் ஏற்றுவதற்கு முன்பு விளக்கை மஞ்சள், குங்குமம், சந்தனம் , பூ சாத்தி அலங்காரம் செய்திருப்பது அவசியம்.

* தீபம் ஏற்றும் போது கணபதி, குரு, லட்சுமி, சரஸ்வதி, நவக்கிரகம், குலதெய்வம், இஷ்டதெய்வங்களை மனதில் நினைக்க வேண்டும்.
Tags:    

Similar News