தொழில்நுட்பச் செய்திகள்
இந்தியாவில் ஒரே மாதத்தில் 18.58 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்!
வாட்ஸ்அப்பின் கொள்கையை மீறியதாக இந்த கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் மட்டும் 18,58,000 கணக்குகளை முடக்கியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் மட்டும் இத்தனை கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
இந்த கணக்குகள் வாட்ஸ்அப்பின் கொள்கைகளை மீறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக அளவில் உண்மைக்கு புறம்பான மெசேஜ்களை ஃபார்வெர்ட் செய்தது, அச்சுறுத்தும் வகையில் வாட்ஸ்அப்பில் தகவல்களை பகிர்ந்தது உள்ளிட்ட காரணங்களால் இந்த கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
இதுபோல உங்களின் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டால், வாட்ஸ்அப் சப்போர்ட்டை தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.
நம் கணக்கு வெரிஃபை செய்யப்பட்டு பின் மீண்டும் பயன்பாட்டுக்கு அளிக்கப்படும்.