உள்ளூர் செய்திகள்
பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாணம்.

பார்த்தன்பள்ளி கோவிலில் திருக்கல்யாணம்

Published On 2022-01-13 10:25 GMT   |   Update On 2022-01-13 10:25 GMT
பார்த்தன்பள்ளி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாணம் நடந்தது.
சீர்காழி:

சீர்காழியை அடுத்த திருப்பார்த்தன்பள்ளி கிராமத்தில் பிரசித்தி பெற்ற பார்த்தசாரதி பெருமாள் கோவில் உள்ளது.

108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாகும். அர்ஜுனன் விரதமிருந்து 
இந்தப் பெருமாளை வழிபட்டதாக புராண வரலாறுகள் கூறுகின்றன. 

இந்த கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதனையொட்டி பெருமாள் மற்றும் ஆண்டாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் சாத்துமுறை நடந்தது. 

மலர்கள் மற்றும் ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து மேளதாளம் முழங்க திருக்கல்யாண உற்சவம் நடத்தி வைக்கப்பட்டது. 

ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் கிருஷ்ணகுமார் பட்டாச்சாரியார் செய்திருந்தார்.

Tags:    

Similar News