செய்திகள்
காங்கிரஸ்

இந்திராகாந்தி பவன்: காங்கிரஸ் கட்சிக்கு டெல்லியில் புதிய அலுவலகம் - டிச. 28ல் திறப்பு விழா

Published On 2019-09-21 12:35 GMT   |   Update On 2019-09-21 12:35 GMT
தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் புதிய அலுவலகமான இந்திராகாந்தி பவன் டிசம்பர் 28-ம் தேதி திறக்கப்படும் என அக்கட்சி இன்று அறிவித்துள்ளது.
புதுடெல்லி:

காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் டெல்லியில் உள்ள அக்பர் சாலையில் நாற்பது ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு புதிய அலுவலகம் கட்டப்பட உள்ளது, அதன் திறப்பு விழா டிசம்பர் 28-ம் தேதி நடைபெற உள்ளது என அக்கட்சி தெரிவித்துள்ளது.



இதுதொடர்பாக அக்கட்சியினர் கூறுகையில், மத்திய டெல்லியில் அமைந்துள்ள கோட்லா சாலையில் எண் 4ல் காங்கிரஸ் கட்சிக்கு புது அலுவலகம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்ட டிசம்பர் 28-ம் தேதி இது திறக்கப்பட உள்ளது. இந்த அலுவலகத்துக்கு இந்திராகாந்தி பவன் என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News