செய்திகள்
மீராபாய் சானு - பிரதமர் மோடி (கோப்புப்படம்)

வெள்ளி பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Published On 2021-07-24 08:53 GMT   |   Update On 2021-07-24 15:12 GMT
மீராபாய் சானுவின் வெற்றி ஒவ்வொரு இந்தியரையும் ஊக்குவிக்கிறது என பிரதமர் மோடி கூறினார்.
புதுடெல்லி:

பளு தூக்குதல் - பெண்கள் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியா வீராங்கனை மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்று உள்ளார்.  டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் முதல் பதக்கத்தை  மீராபாய் சானு வென்று உள்ளார்.

49 கிலோ எடைப் பிரிவில் சீனாவின் ஹாவு ஷிஹூய் தங்கம் வென்றார். மீராபாய் சானுவுக்கு வெள்ளியும், இந்தோனேசியாவின் கான்டிக் விண்டி அய்ஷாவுக்கு வெண்கல பதக்கமும் கிடைத்தது.

வெள்ளிபதக்கம் வென்ற மீராபாய் சானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இந்தியா மகிழ்ச்சி அடைகிறது. மீராபாய் சானு தனது அற்புதமான செயல்திறன் காரணமாக  பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக அவருக்கு வாழ்த்துக்கள். அவரது வெற்றி ஒவ்வொரு இந்தியரையும் ஊக்குவிக்கிறது என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.


Tags:    

Similar News