செய்திகள்

ஓவல் டெஸ்ட்- நடுவரிடம் சண்டையிட்ட ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு அபராதம்

Published On 2018-09-09 10:18 GMT   |   Update On 2018-09-09 15:56 GMT
விராட் கோலிக்கு அவுட் கொடுக்காததால் நடுவர் குமார் தர்மசேனாவிடம் சண்டையிட்ட ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு 15 சதவிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. #ENGvIND
இங்கிலாந்து - இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 332 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின்போது 29-வது ஓவரை ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசினார். அந்த ஓவரில் ஒரு பந்து விராட் கோலியின் கால் பேடை தாக்கியது.

ஜேம்ஸ் ஆண்டர்சன் எல்பிடபிள்யூ அப்பீல் கேட்டார். ஆனால் நடுவர் குமார் தர்மசேனா அவுட் கொடுக்க மறுத்துவிட்டார். இங்கிலாந்து அணி ரிவியூ சென்றது. ரிவியூ-வில் அம்பயர் டெசிசன் என முடிவு செய்யப்பட்டு அவுட் கொடுக்கவில்லை.

இதனால் ஓவர் முடிந்த பிறகு ஜேம்ஸ் ஆண்டர்சன் நடுவர் குமார் தர்மசேனா உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது விராட் கோலியும் வாதத்தில் கலந்து கொண்டார்.



ஆட்டம் முடிந்த பின்னர் கள நடுவர்களான குமார் தர்மசேனா, ஜோல் வில்சன், 3-வது நடுவர் ப்ரூஸ் ஆக்சன்போர்டு ஆகியோர் புகார் அளித்தனர். அப்போது ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது மீதான தவறை ஒத்துக்கொண்டார். ஆண்டர்சனின் தவறு லெவல்-1 ஆகும்.

இதனால் மேற்கொண்டு விசாரணை ஏதுமின்றி போட்டியின் சம்பளத்தில் 15 சதவிதமும், சஸ்பெண்டிற்கான 1 புள்ளியும் வழங்கப்பட்டது. கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு தற்போதுதான் ஐசிசி கண்டனத்திற்குள்ளாகியுள்ளார் ஜேம்ஸ் ஆண்டர்சன்.
Tags:    

Similar News