ஆன்மிகம்
உற்சவர் ஏழுமலையான் தங்க கருட வாகனத்தில் மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி

திருப்பதியில் கருட பஞ்சமியையொட்டி நடந்த கருடசேவை

Published On 2021-08-14 05:43 GMT   |   Update On 2021-08-14 05:43 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உற்சவர் ஏழுமலையான் சிறப்பு அலங்காரத்தில் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த மாதம் 2 கருட சேவை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. கருட பஞ்சமியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முதல் கருட சேவை நடந்தது. இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை உற்சவர் ஏழுமலையான் சிறப்பு அலங்காரத்தில் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

2-வது கருட சேவை நிகழ்ச்சி ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமியையொட்டி வருகிற 22-ந்தேதி நடக்கிறது. மேற்கண்ட இரு கருட சேவை நிகழ்ச்சிகளில் உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
Tags:    

Similar News