தொழில்நுட்பம்
கூ ஆப்

அரசு நிறுவனங்கள் கவனத்தை ஈர்க்கும் கூ ஆப்

Published On 2021-02-10 05:19 GMT   |   Update On 2021-02-10 05:19 GMT
இந்தியாவில் அரசு நிறுவனங்கள் மற்றும் மத்திய மந்திரிகள் கவனத்தை ஈர்க்கும் கூ ஆப் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

ட்விட்டர் சமூக வலைதளத்துக்கு மாற்றாக இந்தியாவில் உருவாகி இருக்கும் புதிய சேவை கூ ஆப். இதனை பல்வேறு மத்திய அரசு துறைகள் மற்றும் மத்திய மந்திரிகளின் புதிய தகவல் பரிமாற்ற தளமாக மாறி வருகிறது.

மத்திய அரசு கடந்த வாரம் அனுப்பிய அறிக்கைக்கு ட்விட்டர் பதில் அளிக்காததால், மத்திய அரசின் உடனடி மாற்று சேவையாக கூ ஆப் மாறி இருக்கிறது. முன்னதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் விவசாயிகள் இனப்படுகொலையை குறிக்கும் வகையில் #farmers genocide என்ற ஹேஷ்டேக் பயன்படுத்திய 257 ட்விட்களை நீக்க ட்விட்டர் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்தது.

பிப்ரவரி 4 ஆம் தேதி தேசிய பாதுகாப்பு ஆணையங்களால் கண்டறியப்பட்ட பாகிஸ்தான் ஆதரவு ட்விட்டர் அக்கவுண்ட்களை நீக்க மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவிட்டது. எனினும், ட்விட்டர் இதற்கு எந்த பதிலும் வழங்கவில்லை. மாறாக ட்விட்டர் இந்தியா பொது கொள்கை பிரிவு தலைவர் மஹிமா கௌல் தனது பதவியை விட்டு விலகினார்.



இதனிடையே இந்தியாவில் உருவான கூ ஆப் சேவையை பல்வேறு மத்திய மந்திரிகள் மற்றும் அரசு நிறுவனங்கள் பயன்படுத்த துவங்கி இருக்கின்றன. கூ ஆப் ட்விட்டர் போன்றே செயல்படும் சமூக வலைதள செயலியாகும். இது கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. பின் ஆகஸ்டு 2020 மாதத்தில் இந்த செயலி பிரதமரின் ஆத்ம நிர்பார் பாரத் போட்டியில் வெற்றி பெற்றது.

இதுவரை கூ ஆப் பத்து லட்சத்திற்கும் அதிக டவுன்லோட்களை பெற்று இருக்கிறது. மேலும் பிரதமர் நரேந்திர மோடியும் இந்தியர்கள் கூ ஆப் பயன்படுத்த ஊக்குவித்தார். இந்த செயலியை அப்ரமேயா ராதாகிருஷ்ணா மற்றும் மயாங் பிதாவ்கா இணைந்து உருவாக்கி இருக்கின்றனர். இருவர் கூட்டணியில் taxiforsure மற்றும் redbus போன்ற ஸ்டார்ட்-அப்களை துவங்கி இருக்கின்றனர். 

தற்சமயம் கூ ஆப் தமிழ், தெலுங்கு, கன்னடா மற்றும் இந்தி என நான்கு மொழிகளில் கிடைக்கிறது. விரைவில் மலையாளம், மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, பங்களா, ஒரியா மற்றும் அசாமிஸ் போன்ற மொழிகள் சேர்க்கப்பட இருக்கின்றன.  

Tags:    

Similar News