செய்திகள்
தற்கொலை

வலங்கைமான் அருகே இளம் பெண் தற்கொலை

Published On 2021-09-04 14:44 GMT   |   Update On 2021-09-04 14:44 GMT
வலங்கைமான் அருகே இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வலங்கைமான்:

வலங்கைமானை அடுத்த பாப்பாக்குடி ஊராட்சி நரிக்குடி கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகள் அகிலா (வயது 22). இவர் எம்.பி.ஏ. படித்து உள்ளார். இவர் அடிக்கடி வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்து உள்ளார். சம்பவத்தன்று வயிற்றுவலி அதிகமானதால் எலிமருந்தை தின்றார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அகிலா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News