செய்திகள்
அபராதம்

முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

Published On 2020-11-20 04:45 GMT   |   Update On 2020-11-20 04:45 GMT
கரூர் மாவட்டம் தவுட்டுபாளையத்தில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
நொய்யல்:

கரூர் மாவட்டம் தவுட்டுபாளையத்தில் சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் போலீஸ் நிரந்தர செக்போஸ்ட் உள்ளது. அப்பகுதிக்கு வந்த சுகாதாரத் துறை ஆய்வாளர்கள் வீரமணி, கார்த்திக் தலைமையிலான அதிகாரிகள் அந்த வழியாக மோட்டார் சைக்கிள்கள், கார்கள், வேன்கள் போன்ற வாகனங்களில் வருபவர்கள் முககவசம் அணிந்து உள்ளனரா? என சோதனை செய்தனர். பின்னர் முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்து வசூலித்தனர். சுகாதாரத்துறையினர் வாகனங்களை நிறுத்தி முககவசம் இல்லாமல் வருபவர்களுக்கு அபராதம் தொகை வசூலித்ததை அறிந்த மோட்டார் சைக்கிளில் வந்தவர்களில் சிலர் அருகிலுள்ள தவுட்டுப்பாளையம் ஊருக்குள் சென்று அங்கிருந்து போலீஸ் செக்போஸ்ட் பின்புறம் வரும் சாலை வழியாக சென்று தேசிய நெடுஞ்சாலை வழியாக மீண்டும் சென்றனர்.
Tags:    

Similar News