உள்ளூர் செய்திகள்
உரக்கடை அதிபரின் காரிலிருந்து 7 பவுன் நகைகள்-பணம் திருட்டு
பட்டுக்கோட்டையில் உரக்கடை அதிபரின் காரிலிருந்த 7 பவுன் நகைகள்&பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டை மணிக்கூண்டு அருகே தெலுங்கன்குடிக்காடு
கிராமத்தைச் சேர்ந்த சங்கர் தனது காரை நிறுத்தி விட்டு
பட்டுக்கோட்டை நகர கூட்டுறவு வங்கிக்கு சென்றுள்ளார்.
இவர் தெலுங்கன்குடிக்காடு கிராம கூட்டுறவு சங்கத் தலைவராகவும், உரக்கடை அதிபராகவும் இருந்து வருகிறார்.
அப்போது சங்கரின் கார் கண்ணாடியை திறந்து மர்ம நபர்கள்
காரிலிருந்த 7 பவுன் நகைகள், 30 ஆயிரம் பணம் மற்றும் ஏடிஎம்
கார்டு உள்ளிட்டவைகளை திருடிச் சென்று விட்டனர்.
இதுகுறித்து சங்கர் பட்டுக்கோட்டை நகர காவல்நிலையத்தில்
புகார் கொடுத்ததன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம
நபர்களை தேடி வருகின்றனர்.
பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் நடந்த
இந்த திருட்டு சம்பவம் பட்டுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சமீபகாலமாக இப்பகுதியில் தொடர் திருட்டு நடைபெறுவது பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.