ஆட்டோமொபைல்
ரெனால்ட் கைகர்

ரெனால்ட் நிறுவனத்தின் புதிய கைகர் எஸ்யுவி கார் அறிமுகம்

Published On 2021-01-29 10:21 GMT   |   Update On 2021-01-29 10:21 GMT
ரெனால்ட் நிறுவனத்தின் புதிய கைகர் மாடல் எஸ்யுவி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


ரெனால்ட்' நிறுவனத்தின் டஸ்டர், க்விட், டிரைபர் வரிசையில் தற்போது ரெனால்ட் கைகர் என்ற நவீன எஸ்யுவி ரக கார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ரக கார் ஸ்போர்ட்டியான மற்றும் வலிமையை எடுத்துக்காட்டும் அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

அதிக செயல்திறன் மற்றும் சிறந்த டிரைவிங் அனுபவத்துக்காக டர்போசார்ஜ் செய்யப்பட்ட 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மூலம் இந்த கார் இயக்கப்படுகிறது. காரை இயக்குபவருக்கு ஏற்றபடி நெகிழ்வுத்தன்மையை வழங்கும் மல்டிசென்ஸ் டிரைவ் முறைகளை இந்த மாடல் கொண்டிருக்கிறது. 



மேலும் காரின் உட்பகுதியில் ஸ்மார்ட் கேபின் உள்ளது. அதனைத்தவிர தொழில்நுட்பம், செயல்பாடு மற்றும் அதிக இடவசதியிலும் தனித்துவம் கொண்ட காராக இருக்கிறது.

இதுகுறித்து ரெனோ இந்தியா தலைமை நிர்வாக அதிகாரியும், நிர்வாக இயக்குனருமான வெங்கட்ராம் மாமிலப்பல்லே கூறும் போது..,

“இந்தியாவில் தொடர்ந்து ரெனால்ட் முன்னேற்ற பாதையில் பயணிக்கிறது. ரெனால்ட் கைகர் காரை அறிமுகம் செய்வதின் மூலம் இந்தியாவில் மற்றொரு முக்கிய நிலையை நாங்கள் எட்டியுள்ளோம். இந்த காரை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களின் ஆசைகள் நிறைவேறும் என்பதில் சந்தேகமில்லை'', 

என தெரிவித்தார்.
Tags:    

Similar News